Thursday 3 March, 2011

இப்போதும் நினைவில்...




நீ பரிசளித்த -
புதுவருட டைரி,
அழகிய பார்க்கர் பேனா,
வண்ண கோலப்புத்தகம்,
பூக்கள் போட்ட கைக்குட்டை...
எல்லாம் மறந்து போயின -
நீ எனக்குப் போட்ட மூன்று முடிச்சோடு!

அன்று என்னிடம்
உன் காதலைச் சொல்ல
காலையில் கொடுத்து,
மாலையில் உதிர்ந்த
அந்த ஒற்றை சிகப்பு ரோஜா மட்டும்
இப்போதும் என் நினைவில்...!

No comments: