Monday 4 October, 2010

ரணமாகும் விநாடிகள்


மௌனங்களின் பார்வைகளிலும்
புரிதல்கள் படிந்திருக்கும்.
வெறுமையின் கரங்களில்
நகக்கீறல்கள் மிச்சமிருக்கும்.
ஊமை நாக்குகளில் எல்லாம்
சுவையின் சுவடுகள் தொலைந்திருக்கும்.

அனுபவம், பக்குவம்...
எல்லாம் கடந்தபின்,
பணத்தின் தேவைக்காக,
போலியாய் சிரித்திருக்கையில் -
நகரும் விநாடிகள்
எல்லோருக்கும் ரணமாயிருக்கும்.



No comments: