Saturday 25 September, 2010

கடவுளின் மறுபக்கம்


தான் நம்பும் கடவுளுக்காக
எதையும் இழக்க தயாராய் இருக்கிறான் மனிதன்.
தன்னை நம்பும் மனிதனுக்காக
ஒரு மயிரையும் இழக்கத்
தயாராயில்லை கடவுள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எங்களைப் படைத்ததாக
உன்னை நம்புகிறோம் பிரம்மனே!
உன்னைப் படைத்ததாக
நீ யாரை நம்புகிறாய்?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒரு பேருந்து பயணத்தில்
என் பக்கத்து இருக்கையில் வந்தமர்ந்தார் கடவுள்.
என்னிடமிருந்த
அவரது பிம்பங்களையெல்லாம்
பொடிப் பொடியாக்கும்படி...

இன்னொரு நாள்...
.
ஒரு பிச்சைக்காரனின்
வறட்சியான சில்லறைத்தட்டில்
திருடிக்கொண்டோடுபவனின்
புன்னகையில்
கடவுளின் சாயல் ஒளிந்திருந்ததனை
நான் கண்டேன்..

பிறகொரு நாள் மாலையில்
என் நிலைக்கண்ணாடியிலும்
அவரைப் பார்க்கநேர்ந்தது..

எல்லோரும்
நினைப்பது போலில்லை கடவுள்
அப்படியும் இருக்கலாம்..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

No comments: