Friday 9 July, 2010

நியாயமில்லை


நாளையும்
நீ சிரித்து விட்டு சும்மா இருந்துவிடுவாய்,
நானும் ஏதோ இருப்பேன்!

உன் விழிகளில் ஏந்தியிருப்பது
விடையா, வினாவா?

புதிர் போடும் பூக்களுக்கு
தடை போட ஆளில்லையா?

இது என்ன வெட்கம்?
ஊரெல்லாம் சொல்லும்போது
தரை பார்த்தா வாசித்தாய்
காதலை?

நீ வெட்கத்தை விடுவதாயில்லை,
நானும் உன்னை விடுவதாயில்லை!

உனக்காக நானும்
எனக்காக நீயும் காத்திருந்தோம்
காதல் வந்த பிறகும் பேசாமல்.
மழைக்காக காத்திருந்தவர்கள்
குடை பிடிப்பதில் நியாயமில்லை.

கெஞ்சிக் கேட்டாகிவிட்டது
காதலை ஒரு வரியில் சொல்லலாமே,
நீயேன் இரண்டு வரியில் சிரிக்கிறாய்?



No comments: